முனியாண்டி குடித்துவிட்டு வந்த நாளி்ல்,
வீட்டில் சாம்பார் வைத்திருந்தால்,
அவர் மனைவியைப் பார்த்து,
 

திடுமாடு நெடுமுருகா,
நித்தம் நித்தம் இந்த இழவா,
வாத்தியாரு சாவாரா,
வயித்தெரிச்சல் தீராதா?

ஏண்டி, தினம் என்னை சாம்பார்
வைச்சே கொல்லப் பாக்குறீ்ங்களா? என்ற வரிகளை
ஒரு மந்திரம் போலச் சொல்லிவிட்டுத்தான் சாப்பிடுவார்.

முனியாண்டிக்குப் பிடித்த மற்றொரு வரி: “நடந்தவை
நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை
நல்லவையாக இருக்கட்டும்.” (குடித்துவிட்டு கலாட்டா செய்தபின், மைத்துனர் பொறி பறக்க அடிக்கும்போது
சொல்லும் வார்த்தைகள் இவை.)