த்ரிஷா – தமிழ் சினிமாவின் முன்ன நடிகை. சிம்ரன் திருமணம் செய்து கொண்டு திரையுலகைவிட்டு ஒதுங்கியபின், கையறு லையில் இருந்த தமிழ் இயக்குனர்களுக்கும் ரசிகர்களுக்கும் அபயகரம் அளித்தவர். த்ரிஷாவைப் பார்ப்பதற்காக மட்டுமே சில ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருகிறார்கள் என்பதை எந்த ஆய்வாளனும் மறுக்க முடியாது. கால, தேச வர்த்தமானங்கள் அர்த்தமிழந்து போயிருக்கும் இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழ் சினிமாவில் த்ரிஷா பெற்றிருக்கும் வெற்றிக்கு அவரது அழகும் நடிப்பும் மட்டும்தான் காரணமா? தமிழ் சமூகத்தின் மீது, தமிழ் சினிமாவின் மீது அக்கறை கொண்ட ஒரு வரலாற்றாய்வாளன் இக்கேள்விகளை எழுப்பிக் கொள்வது தவிர்க்க இயலாததாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில் த்ரிஷாவின் வெற்றி என்பது அழகும் நடிப்பும் கொண்ட ஒரு பெண்ன் வெற்றி மட்டுமல்ல. த்ரிஷா தமிழ்நாட்டில்தான் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் அவர் ஒரு பாலக்காட்டு பிராமணக் குடும்பத்தை சேர்ந்தவர். இந்த ஒரு விஷயமே பசி சத்யாவுக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போவதற்கான காரணத்தையும் த்ரிஷாவுக்கு தொடர்ந்து வாய்ப்புக் கிடைப்பதற்கான காரணத்தையும் தெளிவாகச் சொல்லிவிடுகிறது.
கேரள-தமிழக எல்லையில் அமைந்திருக்கும் கண்ணகி கோவிலில் வருடாவருடம் நடக்கும் திருவிழாவிற்கு செல்லும் தமிழர்களை கேரள காவல்துறை தொடர்ந்து தாக்கி வருகிறது. தங்கள் தாய் தெய்வமான கண்ணகியை வழிபடவியலாத தமிழர்களின் கண்ர் இதுவரை எந்த புத்தகத்திலும் பதிவானதாக தெரியவில்லை. மற்றொரு புறம், பெரியார் அணையில் 136 அடிக்கு மேல் தண்ர் தேக்கக் கூடாது என தொடர்ந்து தடுத்து வருகிறது கேரள அரசு.
இந்த சூழலில்தான் மலையாளப் பெற்றோருக்குப் பிறந்த த்ரிஷாவின் வெற்றியைப் பொருத்திப் பார்க்க வேண்டும். த்ரிஷா அறிமுகமான முதல் படம் லேசா லேசா. அதை இயக்கிய ப்ரியதர்ஷன் ஒரு மலையாள இயக்குனர். அந்தப் படத்தில் ஒரு பெரிய குடும்பத்தின் மகளாக வருகிறார் த்ரிஷா. குடும்பம் என்ற அமைப்புதான் பெண்ணடிமைத்தனத்திற்கே காரணம் என்று முழங்கியவர் பெரியார். போகட்டும். பெரிய குடும்பம் என்பது லவுடைமை சமுதாயத்தின் எச்சம். ற்க. அந்தப் படத்தில் த்ரிஷா ரகசியமாகத் திருமணம் செய்துக் கொள்ளும் வாலிபன் (அந்தப் பாத்திரத்தை ஏற்றிருப்பவர் பார்ப்பன மரத்தினத்தின் செல்லப் பிள்ளையான மாதவன்) நக்ஸலைட்டாக இருப்பதும் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதும் கதைப் போக்கிற்கு அவசியமான ஒன்றுதானா? இந்த இடத்தில் இயக்குனரும் த்ரிஷாவும் சொல்ல வரும் செய்தி ஒன்றுதான். நக்ஸலைட்டை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை முழுக்க கண்ர்தான் என்பதுதான் அந்த செய்தி.
அடுத்ததாக சாமி. இந்தப் படத்திலும் அவர் பிராமணப் பெண்தான். பெரும்பாலான படங்கள் பிராமணர்களை நடுத்தர வர்க்கமாகவும் ஒண்டுக் குடித்தனக்காரர்களாகவும் காட்டி பிராமணர்களின் மேல் அனுதாப அலையை உண்டுப் பண்ணும் காரியத்தைச் செய்கின்றன. கோயில், குளம் என்று கட்டியழும் குருக்களை மட்டும் சித்தரித்துவிட்டு (இந்த படத்தில் அந்த பாத்திரத்தை செய்பவர் தென் மாவட்டங்களில் ஆதிக்க சாதியாக விளங்கும் தேவர் சமூகத்தைச் சேர்ந்த விவேக்) அதிகார மையங்களில் கேந்திரக் கண்களாக இருக்கும் பிராமணர்களை கண்டுக் கொள்ளாமல் இருக்கும்படி இவை தூண்டுகின்றன. இப்படியான சித்திரங்கள் பிராமணர்களை வரலாற்றில் வைத்துப் பார்க்காமலும் நடைமுறை சமூகச் சூழலில் வைத்துப் பொருத்திக் காட்டாமலும் தனித்தனியாக எடுத்து முன்னிறுத்தும் முயற்சிகளாகும்.
(தொடரும்)
October 5, 2006 at 6:30 pm
wow…. I 201% agree
))))
October 5, 2006 at 9:11 pm
எப்படிங்க இதெல்லாம்.
பாலா புண்ணியத்தில பாக்க கிடைச்சிது
தேங்ஸ் பாலா.
தேங்ஸ் கட்டியக்காரன்
இவ்வளவு தெளிவா எவனும் தமிழ் வரலாற்றை அலசினதில்லை(!!!)
October 6, 2006 at 12:53 pm
உங்களுக்குத் தலையங்கம் ஃபார்மேட் அமர்க்களமாக வருகின்றது! அடுத்த பகுதிகளையும் சீக்கிரம் வெளியிடுங்கள்.
October 11, 2006 at 5:05 am
trisha thodarum endru pottirukireergal. adutha athiyayathukkaaka aarvamudan kaathirukkirom.