உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் பா.ம.க. தலைவர் மருத்துவர் ராமதாஸ். பேட்டியிலிருந்து:
கே. இந்திய அணியின் தோல்வி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப. இன்றைக்கு தமிழ்நாட்டில் தி.மு.கவினர் எந்த அளவுக்கு அராஜகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதற்கு இந்தத் தோல்வி ஒரு சான்று.
கே. தி.மு.கவிற்கும் கிரிக்கெட் தோல்விக்கும் என்ன சம்பந்தம்?
ப. இதே கேள்வியை கருணாநிதியிடம் கேட்கும் துணிச்சல் உங்களுக்கு இருக்கிறதா?
கே. இந்திய கிரிக்கெட்டில் என்ன மாற்றம் செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?
ப. முதலில் சரத்பவாரை பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து தூக்க வேண்டும். அன்புமணி ராமதாஸ் போன்ற ஓரு பிற்படுத்தப்பட்டவரை அதன் தலைவராக்க வேண்டும். வேல்முருகன் எம்.எல்.ஏ போன்றவர்கள் பலமுறை கிரிக்கெட் பார்த்திருக்கிறார்கள். அவர்களை அணியில் சேர்க்க முடியாமல் எது தடுக்கிறது? உலகக் கோப்பை போட்டிகளை ஒளிபரப்பும் உரிமைகளை மக்கள் டிவிக்குத் தரவேண்டும். உலகம் முழுவதும் கிரிக்கெட் பார்ப்பவர்களில் 99 சதவீதம் பேர் தமிழர்கள். அந்த உரிமையை ஏன் ஒரு தமிழ் தொலைக்காட்சிக்குத் தரக்கூடாது?
கே. பாப் வூல்மர் கொலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப. பாப் இவூல்மரின் அறையில் வீராசாமி படத்தின் வி.சி.டி இருந்ததாக குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருவது எல்லோருக்கும் தெரியும். ஆரம்ப காலத்திலிருந்தே குறுஞ்செய்திகளை எதிர்ப்பவன் நான். அவை பல விதங்களில் மக்களுக்கு உதவியாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அதை எதிர்த்து வந்திருக்கிறேன். ஆனாலும் இந்த குறுஞ்செய்தியை நம்பாமல் இருக்க முடியவில்லை. விராசாமியை இயக்கிய வெற்றி ராசேந்தர் தி.மு.கவைச் சேர்ந்தவர். பால் இவூல்மரின் கொலையே அறிவாலயத்தில்தான் திட்டமிடப்பட்டது என்பதற்கு போதுமான ஆதரங்கள் இருக்கின்றன.
கே. ஏன் தி.மு.கவை தொடர்ந்து தாக்கிவருகிறீர்கள்?
ப. தினமும் தயாநிதிமாறன் மூலம் தில்லியுடன் பேசிவரும் கருணாநிதி, ஒரு பிற்படுத்தப்பட்டவருக்கு கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை பெற்றுத்தர முடியாதா? ஒரு ஆயா வேலைக்கு சிபாரிசு செய்தால்கூட கேட்கமாட்டேன் என்கிறார்கள்.
கே. உங்கள் பரிந்துரைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கேட்காவிட்டால் என்ன செய்வீர்கள்?
ப. பா.ம.க. தலைவர் கோ.க. மணி தலைமையில் அறிவாலயம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம். தமிழகம் முழுவதும் பா.ம.க. தொண்டர்கள் மாவட்ட தி.மு.க. அலுவலகம் முன்பு ஆர்ப்பாடம் நடத்துவார்கள். மக்கள் நிம்மதியாக இருக்க விடாமல் பார்த்துக்கொள்வோம்.
பெண்ணியம் என்பதை பொத்தாம்பொதுவாக விளக்குவதானால், சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில் ஆணாதிக்கத் தனத்திலிருந்து பெண்களை விடுவிப்பது என்று சொல்லலாம். பல ஆண்டுகளாக இது குறித்த கருத்துகள், சிந்தனைகள் வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றன. மேரி டாலி, சார்லோட் பஞ்ச், மெரிலின் ஃப்ரை போன்ற பெண்ணியவாதிகள் பெண் விடுதலையை முன்வைத்து தொடர்ந்து போராடியும் எழுதியும் வந்தனர். நம்மிடத்தில் இப்படிச் சிந்தனையாளர்கள் யாரும் இல்லை. அது பெரிய பிரச்னையாகவும் இல்லை. மேலை நாட்டு பெண்ணியவாதிகளின் சிந்தனைகளை நம் நாட்டிற்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளலாம். அல்லது அப்படியே பயன்படுத்தலாம்.
முதல் உலகப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தத நேரம். 1914ஆம் வருடம் செப்டம்பர் 22ந் தேதி ஜெர்மானிய போர்க் கப்பலான எம்டன் செ