velu2.jpg மத்திய ரயில்வேத் துறை இணையமைச்சர் ஆர். வேலு இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அவரது பேட்டியிலிருந்து: 

கே: சென்னை சென்டரலில் புறநகர் ரயில்கள் சரியாக வராததை எதிர்த்து மறியல் செய்தவர்களை கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறீர்களே.

ப. மக்களுக்காக ரயில்வே என்று நினைத்துவிட்டார்களா? ரயில்வேவுக்காகத்தான் மக்கள். இனியும் மறியல் செய்பவர்களை பா.ம.க. தொண்டர்கள் கவனித்துக் கொள்வார்கள்.

கே. தென் மாவட்டங்களுக்கு எப்போதும் ரயில்கள் மிகுந்த நெரிசலுடன் செல்கின்றன. அந்த ரூட்டில் இரட்டை ரயில்பாதை எப்போது போடுவீர்கள்?

ப. திண்டிவனத்திற்கும் நகரிக்கும் இடையில் பணிகள் துவங்கிவிட்டன.

கே. நகரி ஆந்திராவில் இருக்கிறது. திண்டிவனத்திற்கும் நகரிக்கும் இடையில் எதற்கு இரட்டைப் பாதை?

ப. சென்னைக்கும் தென்மாவட்டங்களுக்கும் இடையில் திண்டிவனம் இருப்பதால், எல்லாத் திட்டங்களிலும் திண்டிவனம் பயனடைகிறது என்பது உண்மைதான். ஆனால், திண்டிவனத்திற்கென்று தனியாக ஏதாவது திட்டம் வேண்டாமா? அதனால்தான்.

கே. ஏன் ரயில்வே திட்டங்களில் தென்மாவட்டங்களைப் புறக்கணிக்கிறீர்கள்?

ப. தென் மாவட்டங்களில் வன்னியர்களா இருக்கிறார்கள். வன்னியர்களின் ரயில்வே அன்னியருக்குக் கிடையாது.  

கே. எதிர்க்கட்சிகள் போராட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் சொல்லியிருக்கிறாரே?

ப. போராடுவது ஜனநாயக உரிமை. அதை யாரும் பறிக்க முடியாது.

கே. ரயில்வேவின் அநியாயங்களை எதிர்த்துப் போரிடுவதும் ஜனநாயக உரிமைதானே?

ப. யார்றா.. இவண்? கேணத்தனமா கேட்டுக்கிட்டு… ரயில்வேவை எதிர்த்தா ஜெயில்தான். ஆனா, தமிழக அரசோட எல்லாத் திட்டங்களையும் நாங்க எதிர்ப்போம்.

கே. சென்னைக்கும் நாகர்கோவிலுக்கும் இடையில் இரட்டை ரயில்பாதை போட்டால், ரயில்களில் கூட்டம் குறையுமே?

ப. வந்துட்டார்யா ரயில்வே அமைச்சர் சொல்றதுக்கு. எங்களுக்குத் தெரியாதா?

கே. புதிதாக ஏதாவது ரயில்வே திட்டங்கள் இருக்கிறதா?

ப. ஏன் எங்கிட்ட கேக்குற? இதுக்கு முன்னாடி கேள்வி கேட்டானே அவங்கிட்ட கேளு.. டேய் எந்திரிங்கடா… பத்திரிகையாளர் கூட்டமெல்லாம் முடிஞ்சுபோச்சு.. போங்க.. போங்க…