1.

பள்ளிக்கூட நினைவுகள்

பாதியில் கலைவதில்லை

இப்போது எதிர்ப்பட்டாலும் 

கேட்கிறாய்

கடலை மிட்டாய் 

வாங்கிக் கொடுத்த

கடனை.

 

2.

முறுக்குவித்த கோவிந்தம்மாளுக்கு 

அப்போதே வயது 60.

இப்போதோ 

80.

முறுக்கு விலை 

ஏறும்போது

சேர்ந்தே ஏறுகிறது 

வயதும்.

 

3.

கவிதை என்பது

பித்தனின் உளறல்

கவிதை என்பது 

காதலின் ஆன்மா

கவிதை என்பது

இரண்டாம் ஆட்ட சினிமா

கவிதை என்பது

குளிர்ந்த பீர்

கவிதை என்பது

ஆஃபரில் கிடைக்கும் பீஸா

கவிதை என்பது

600 காப்பிகள் அடிக்க உதவும் எழுத்து

கவிதை என்பது

விசிட்டிங் கார்ட்

கவிதை என்பது

கவிஞனின் திமிர்

கவிதை என்பது

இல்லாத ஒன்று.