1.
பள்ளிக்கூட நினைவுகள்
பாதியில் கலைவதில்லை
இப்போது எதிர்ப்பட்டாலும்
கேட்கிறாய்
கடலை மிட்டாய்
வாங்கிக் கொடுத்த
கடனை.
2.
முறுக்குவித்த கோவிந்தம்மாளுக்கு
அப்போதே வயது 60.
இப்போதோ
80.
முறுக்கு விலை
ஏறும்போது
சேர்ந்தே ஏறுகிறது
வயதும்.
3.
கவிதை என்பது
பித்தனின் உளறல்
கவிதை என்பது
காதலின் ஆன்மா
கவிதை என்பது
இரண்டாம் ஆட்ட சினிமா
கவிதை என்பது
குளிர்ந்த பீர்
கவிதை என்பது
ஆஃபரில் கிடைக்கும் பீஸா
கவிதை என்பது
600 காப்பிகள் அடிக்க உதவும் எழுத்து
கவிதை என்பது
விசிட்டிங் கார்ட்
கவிதை என்பது
கவிஞனின் திமிர்
கவிதை என்பது
இல்லாத ஒன்று.
February 1, 2009 at 4:08 am
aiyo aiyo!!! (ithai vadiveluvin stylil padikkavum
February 1, 2009 at 8:43 am
இரண்டாவது கவிதை மாமுத்து!
February 2, 2009 at 12:48 pm
நவ கவிதை நல்லா இருக்கு சார்!