July 2009


நமது தணிக்கைச் சட்டங்கள் வேடிக்கையானவை என்பது தெரிந்ததுதான். அதில் மேலும் ஒரு காமெடி. இந்த வெள்ளிக்கிழமை கரண் நடித்த மலையன் படம் ரிலீஸானது. அந்தப் படம் ஒடும் திரையரங்கில் அந்தப் படத்தின் தணிக்கைச் சான்றிதழையும் எந்தெந்த இடங்களில் காட்சிகள் வெட்டப்பட்டிருக்கின்றன என்ற பட்டியலையும் திரையரங்கில் ஒட்டியிருந்தார்கள்.
ஏதாவது சுவாரஸ்யமான காட்சியை அவர்கள் மட்டும் பார்த்துவிட்டு, நம்மைப் பார்க்கவிடாமல் வெட்டிவிட்டார்களா என்று தெரிந்துகொள்ள நான் அந்தப் பட்டியலை முழுமையாகப் படித்துவிடுவது வழக்கம். இந்த மலையன் படத்தின் வெட்டுப் பட்டியலில்தான் இந்தக் காமெடி. கதாநாயகி தூங்குவது போல ஒரு காட்சி. அதில் காற்றில் தாவணி விலகி, அவரது தொப்புள் தெரியும். அந்தக் காட்சியை வெட்டச் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், படத்தில் ஆரம்பத்தில் ஒரு கரகாட்டப் பாட்டு வருகிறது. அதில்  கரகாட்டம் ஆடும் நடிகை, மார்பிலும் இடுப்பிலும் ஏதோ பெயருக்கு ஆடை அணிந்துகொண்டு ஆடுவார். படு ஆபாசமான பாடல் அது. அதில் வெட்டு இல்லை!
நம் தணிக்கை அதிகாரிகளைப் பொறுத்தவரை, கதாநாயகியின் தொப்புளில்தான் கலாச்சாரம் குடியிருக்கிறது. அது வெளியில் தெரிந்துவிடக்கூடாது. கரகாட்டக்காரி எதைக் காட்டினாலும் சரி, கலாச்சாரத்திற்கு எந்தப் பாதிப்பும் கிடையாது.
படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தயாரிப்பாளர்களும் மறுபேச்சுப் பேசாமல் இதையெல்லாம் ஒப்புக்கொண்டுவிடுகிறார்கள்.
ஷம்மு

இவர் காண்பித்தால் கெட்டுவிடும்

நமது தணிக்கைச் சட்டங்கள் வேடிக்கையானவை என்பது தெரிந்ததுதான். அதில் மேலும் ஒரு காமெடி. இந்த வெள்ளிக்கிழமை கரண் நடித்த மலையன் படம் ரிலீஸானது. அந்தப் படம் ஒடும் திரையரங்கில் அந்தப் படத்தின் தணிக்கைச் சான்றிதழையும் எந்தெந்த இடங்களில் காட்சிகள் வெட்டப்பட்டிருக்கின்றன என்ற பட்டியலையும் திரையரங்கில் ஒட்டியிருந்தார்கள்.

ஏதாவது சுவாரஸ்யமான காட்சியை அவர்கள் மட்டும் பார்த்துவிட்டு, நம்மைப் பார்க்கவிடாமல் வெட்டிவிட்டார்களா என்று தெரிந்துகொள்ள நான் அந்தப் பட்டியலை முழுமையாகப் படித்துவிடுவது வழக்கம். இந்த மலையன் படத்தின் வெட்டுப் பட்டியலில்தான் இந்தக் காமெடி. கதாநாயகி தூங்குவது போல ஒரு காட்சி. அதில் காற்றில் தாவணி விலகி, அவரது தொப்புள் தெரியும். அந்தக் காட்சியை வெட்டச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், படத்தில் ஆரம்பத்தில் ஒரு கரகாட்டப் பாட்டு வருகிறது. அதில்  கரகாட்டம் ஆடும் நடிகை, மார்பிலும் இடுப்பிலும் ஏதோ பெயருக்கு ஆடை அணிந்துகொண்டு ஆடுவார். படு ஆபாசமான பாடல் அது. அதில் வெட்டு இல்லை!

நம் தணிக்கை அதிகாரிகளைப் பொறுத்தவரை, கதாநாயகியின் தொப்புளில்தான் கலாச்சாரம் குடியிருக்கிறது. அது வெளியில் தெரிந்துவிடக்கூடாது. கரகாட்டக்காரி எதைக் காட்டினாலும் சரி, கலாச்சாரத்திற்கு எந்தப் பாதிப்பும் கிடையாது (அதாவது, குஷ்பு பாதுகாப்பான செக்ஸ் பற்றிப் பேசினால், தமிழ்க் கலாச்சாரம் கெட்டுவிடும்; வேலு பிரபாகரன் பிட்டுப் படம் மாதிரி படம் எடுத்தால் தமிழ் கலாச்சாரம் பாதுகாக்கப்படும் என்பது மாதிரி!).

இவர் காண்பித்தால் கெடாது

இவர் காண்பித்தால் கெடாது

படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தயாரிப்பாளர்களும் மறுபேச்சுப் பேசாமல் இதையெல்லாம் ஒப்புக்கொண்டுவிடுகிறார்கள்.

மதுரை பிரஸ் லோகோ

மதுரை பிரஸ் லோகோ

என்னுடைய நண்பர் ஒருவர் மதுரை பிரஸ் என்று ஒரு பதிப்பகம் வைத்திருக்கிறார். மதுரைக்காரர். தன் பதிப்பகத்திற்கு இப்படி ஒரு பெயர் அமைந்ததில் அவருக்கு ஏகப்பட்ட சந்தோஷம். தலைக்கனம் என்றுகூடச் சொல்லலாம். சற்று கர்வமாகத்தான் திரிவார். தன் ஊர்ப் பெயரும் பதிப்பகம் சார்ந்த பிரஸ் என்ற வார்த்தையும் நன்றாகப் பொருந்திப் போவதாக பார்த்தவர்களையெல்லாம் மொக்கை போடுவார். யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களை பார்ப்பதுபோல, பிற பதிப்பகத்தினரையெல்லாம் படு இகழ்ச்சியாகப் பார்ப்பார். இந்த அளவுக்குப் பெயர் அமையவில்லையாம்.

ஆனால், ஆண்டவன் என்று ஒருவன் இருக்கிறானே!  அந்த நாளும் வந்தது. சென்னை கோவிந்தன் ரோட்டிலிருந்து சிஐடி நகருக்குத் திரும்பும் இடத்தில் ஒரு பெயர்ப் பலகை. மதுரை மெஸ். பைக்கை ஓட்டிக்கொண்டிருந்த மதுரைக்காரருக்கு சுரீர் என்றது. பைக்கின் பின்னால் உட்கார்ந்திருந்த நண்பர், “’டேய் உன் கம்பனி பேரும் மதுரை மெஸ்தானே..” என்றார். மதுரைக்காரர் உள்ளுக்குள் நொறுங்கிப் போனார். “அது மதுரை பிரஸ்” என்றார் கொஞ்சம் சுருதி குறைந்து. “இரண்டும் ஒன்னு மாதிரிதான்டா இருக்கு.. என்ன பெரிய வித்தியாசம்?” என்றார் பில்லியன் நண்பர். அவமானத்தில் தலை கவிழ்ந்தார் மதுரைக்காரர்.

இப்போது ராத்திரியானால், அந்த மதுரை மெஸ்ஸில் புரோட்டா வாங்கித் தின்றுவிட்டு, “மதுரைக்காரன்னா சும்மாவா.. புரோட்டா சூப்பர்… நீங்களும் ரெண்டு சாப்பிடுங்க சார்” என்று பில்டப் கொடுத்துக்கொண்டு திரிகிறார். ஒருவர் கர்வத்தை அடக்க ஆண்டவன் என்னவெல்லாம் செய்கிறார் பாருங்கள்!

செல்போனில் ஒரு அழைப்பு வருகிறது. எடுத்துப் பேசினால் நடிகர் மாதவன். நான் நடித்திருக்கும் வாழ்த்துகள் படத்தைப் பாருங்கள் என்கிறார். விளம்பரம்! சினிமா வெளியீடும் அதன் விளம்பர யுத்திகளும் எந்த அளவுக்கு மாறிவிட்டன? செல்போனில் வந்த விளம்பரம் உண்மையி்ல் எனக்கு ஒரு எதிர் மனநிலையை உருவாக்கியது. இப்படி நம்மைத் தொந்தரவு செய்து, விளம்பரத்தைத் திணிக்கும் இந்தப் படத்தைப் பார்க்கவேகூடாது என்று தோன்றியது (படத்தை இயக்கியிருப்பது சீமான் வேறு!).

தேடி வந்த திரையரங்கு

தேடி வந்த திரையரங்கு

80களின் துவக்கம். இரவு ஒரு ஏழு-ஏழரை மணி வாக்கில் ஒரு பேண்டு வாத்தியச் சத்தம் கேட்கும். புத்தகத்தைப் போட்டுவிட்டு எல்லோரும் ரோட்டுக்கு ஓடிவருவோம். முதலில் ஒரு பேண்டு வாத்தியக்காரன் பேண்டு அடித்துக்கொண்டு செல்வான். அடுத்ததாக ஒரு பெண் பெட்ரமாக்ஸ் லைட்டைத் தூக்கிச் செல்வார். அடுத்ததாக அந்த வாகனம் வரும். இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்ட (பார்க்க வரைபடம்) அந்த வாகனம் வரும். ஒரு பெரிய தகரம். அதைச் சுற்றி பிரேம். இரண்டு சக்கரங்கள் இதுதான் அந்த வாகனம். இதன் இரண்டு பக்கமும் வரவிருக்கும் அல்லது அப்போதுதான் ரிலீஸாகியிருக்கும் படங்களின் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும். இது போல குறைந்தது இரண்டு வண்டிகளாகவது வரிசையாக வரும். இந்த வண்டிகளின் பொற்கால யுகத்தில் அதாவது 82-83ல், ரிலீஸாகும் படத்தைப் பற்றிய விவரங்களுடன் கூடிய சாணித் தாளில் அடிக்கப்பட்ட நோட்டீஸை ஒருவர் கொடுத்துக் கொண்டே போவார். எங்களைப் போன்ற சின்னப் பையன்களுக்கு கொடுக்க மாட்டார்கள். “அண்ணே.. அண்ணே…” என்று கெஞ்ச வேண்டும். அந்த நோட்டீஸில் சில சமயங்களில் படத்தின் ஸ்டில் போக கதை, நடிகர்கள், இயக்குனர் விவரங்கள் இடம் பெற்றிருக்கும். பல சமயங்களில் கதை இல்லாமல் இந்த விவரங்கள் இருக்கும். எப்படியிருந்தாலும் அந்த நோட்டீஸைப் படிப்பது சுவாரஸ்யமான விஷயம்.

மதுரையின் மத்தியப் பகுதியில் அல்லது அதைச் சுற்றியிருந்த சென்ட்ரல், தேவி, நியூ சினிமா, சிட்டி சினிமா, சக்தி, சிவம் போன்ற தியேட்டர்களின் விளம்பரங்கள் மட்டுமே வடக்கு மாசி வீதியில் வரும். பிறகு, நோட்டீஸ் கொடுக்காமல் வாகனங்கள் மட்டும் ஒன்றிரண்டு ஆண்டுகள் வந்தன.  பிறகு வடக்கு மாசி வீதியில் போக்குவரத்து அதிகரிக்க, அதிகரிக்க 80களின் மத்தியிலேயே இந்த விளம்பர வாகனங்கள் வருவது நின்றுவிட்டது. நகரம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியே விளம்பரம் செய்துவிடலாம் என்று திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்திருக்க வேண்டும்.

செல்போனில் நடிகர்களே வந்து படம் பார்க்கச் சொல்லும் கால கட்டத்திலும் அந்தத் தகர விளம்பர வண்டியே இன்னும் ஈர்ப்புடையதாக இருக்கிறது. இதற்கு என் பழமை மோகம் மட்டும் காரணம் இல்லை என்று தோன்றுகிறது. அதிலிருந்த ஒரு பாமர எளிமையும் சினிமா பார்க்கும் வாய்ப்பு குறைவாக இருந்த காலகட்டத்தில் சினிமா திரை போன்ற அந்த வாகனமே எங்களைத் தேடி வருவதுமே எங்களை ஈர்த்திருக்க வேண்டும்.

பிரமாதமான நடிப்பு

பிரமாதமான நடிப்பு

பா. விஜய் நம் கலாம் கையால் தேசிய விருது வாங்கிய பாடலாசிரியர். பாக்யாவில் படு மோசமான சித்திரங்களுடன் உருகி.. உருகி.. கவிதை நடையில் ஒரு தொடர் எழுதிக்கொண்டிருந்தார். திடீரென்று பார்த்தால் ஒரு நாள் தாய் காவியம் என்று ஒரு படம், ஞாபகங்கள் என்று ஒரு பூப்போட்ட படம் என்றெல்லாம் விளம்பரங்கள் வர ஆரம்பித்தன. கடைசியில் ஞாபகங்கள் வெளிவந்தேவிட்டது.

வசதியில்லாத ஒரு ரொம்ப நல்லவர் ஒரு பெண்ணை பயங்கரமாக, பயங்கர டீசன்டாகக் காதலிப்பது, பிறகு அந்தப் பெண்ணுக்கு ஒரு வீணாய்ப் போனவருடன் கல்யாணம் நடப்பது, பிறகு இந்த நல்லவர் பெரிய்ய ஆளாகி அந்த வீணாகப் போனவளைச் சந்திப்பது என்ற காவியக் காதல் கதையை 100 ஆண்டு கால சினிமாவில் பல முறை பார்த்தாகிவிட்டது. இந்தப் படத்தில் இன்னொரு முறை. இது ஒரு உண்மைக் கதை என்று படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் ஒரு பில்ட் அப் வேறு கொடுக்கிறார் விஜய்.

சினிமா கவிஞர்களுக்கு என்று ஒரு பிம்பம் இருக்கிறது. வெள்ளை ஜிப்பா போடுவார்கள். எப்போதும் புன்னகையுடன் இருப்பார்கள். பேசும்போது எதுகை மோனையில் வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். மென்மையாக நடந்துகொள்வார்கள். அதுவும் பெண்கள் என்றால் கேக்கவே வேண்டாம்.. அப்புறம்.. மெதுவாக, கம்பீரமாக நடப்பார்கள். இது ஒரு பாமர பிம்பம். ரவுடிகள் எல்லாம் கட்டம் போட்ட பனியன் போட்டிருப்பார்கள் என்பது மாதிரி. வைரமுத்துவை ஒரு தடவை நேரில் பார்த்தாலோ, உரையாடினாலோ இந்த பிம்பம் எல்லாம் கலைந்துவிடும்.

இந்த டுபாக்கூர் பிம்பத்தை அப்படியே பின்பற்றுகிறார் விஜய். மென்மையாக ஒரு புன்னகை. ஜிப்பா. எதுகை மோனையில் அசட்டு கவிதைகள். மென்மையாக நடந்து கொள்வது. இந்த மென்மையாக நடந்துகொள்வது என்றால் என்னவென்று இந்த இடத்தில் விளக்கிவிடுகிறேன். அதாவது, காதலிக்கும் பெண்ணுடன் தனியறையில் இருந்தால்கூட மயிலிறகால்தான் தடவுவார் கவிஞர். காதலியே முன்வந்து படுக்கத் தயாரானால்கூட, “நீ குழந்தைமா” என்று மறுத்து…

ஆனால், படம் முழுக்க தன்னை மகா கவிஞன் என்று மற்றவர்களைச் சொல்ல வைத்து அழகு பார்ப்பதில் மட்டும் கூச்சம் கிடையாது.

இந்த படத்தைப் பற்றிச் சொல்ல ஏதாவது ஒரு நல்ல விஷயம் கிடைக்குமா என்று போகஸ் லைட் போட்டுப் பார்த்தால்கூட… ம்.. ஹும்… நடிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிறார் விஜய். அவ்வப்போது கண்ணாடியைக் கழற்றி மாட்டுவதுதான் அவருடைய உட்சபட்ச நடிப்பு.  பல முக்கிய காட்சிகளில் அழுகிறாரா, ஆத்திரப்படுகிறாரா, சிரிக்கிறாரா என்று புரியாத வகையில் ஒரு முகபாவம் காட்டுகிறார்.

படத்தில் காமெடி ட்ராக் என்று தனியாக இல்லை. அந்தக் குறையை, படத்தில் வரும் புரட்சிகர தோழர்கள் தீர்க்கிறார்கள். தீவிர மார்க்ஸியமோ, தமிழ்த் தேசியமோ பேசுகிற ஒரு குழு இவர் ஒரு கட்டுரைக்குக் கொடுக்கும் தலைப்பைப் (குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று உரையாற்றுகிறார் குடியரசுத் தலைவர். இந்தியா சுதந்திரம் வாங்கிவிட்டது – இதுதான் அந்த அற்புதமான தலைப்பு) பார்த்து அசந்துபோய் ரூ. 5,000 பரிசளிக்கிறார்களாம். அதைப் பார்த்து போலீஸ்காரர்கள் பிடித்துக்கொண்டுபோய் வைத்து அடிக்கிறார்களாம்.

சினிமாவைக் கண்டுபிடித்தது எவ்வளவு தவறாகப் போய்விட்டது?

(குத்துப் பாட்டு இல்லாமல், கதாநாயகியின் சதையைக் காட்டாமல், சண்டைக் காட்சி இல்லாமல் ஒரு தரமான படத்தை எடுத்தால், அதை வரவேற்கும் நல்ல குணம் இல்லையே என்று திட்டும் அன்பர்களை வரவேற்கிறேன்)

தமிழில் கடந்த சில மாதங்களாக வெளிவரும் படங்களைப் பார்க்கும் சினிமா ரசிகனுக்கு விரக்திதான் மிச்சம். பசங்க படத்திற்குப் பிறகு சொல்லும்படியாக ஒரு படமும் வரவில்லை. இதற்கிடையில் டிவிகளில் நாடோடிகள் படத்தின் விளம்பரம் வெளிவந்தபோது, சட்டென எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை பிறந்தது. சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் கொண்டாடப்பட்ட படமான சுப்ரமணியபுரம் படத்தை இயக்கிய சசிகுமார் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருப்பதும், இந்தப் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி சுப்ரமணியபுரம் படத்தில் நடித்திருந்ததும்தான் இந்த எதிர்பார்ப்பிற்குக் காரணம். இந்த சமுத்திரக்கனி, இதற்கு முன்பு நிறைஞ்ச மனசு படத்தில் நடித்திருந்தார் என்பதும் பிறகு டிவி சீரியல்களை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் கொஞ்ச நாள் மறந்துபோய், அந்த டிரெய்லர்களைப் பார்க்கும்போதெல்லாம் ஒருவித பரவசம் ஏற்பட்டது.
ஆனால், படத்தைப் பார்த்தவுடன் கடும் விரக்தி ஏற்படுகிறது. சசிகுமார் என்ற இயக்குனர் – நடிகரின் பெயரில் இருக்கும் பிராண்ட் வேல்யூவை வைத்துக்கொண்டு ஒரு அமெச்சூரான படத்தைக் கொடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி. மூன்று நண்பர்கள். மூவருக்கும் வெவ்வேறு இலக்குகள். அப்போது, சசிகுமாரைத் தேடி பழைய நண்பர் ஒருவர் வருகிறார். அவருடைய காதலில் பிரச்னை. அந்த இளைஞரையும் அவரது காதலியையும் பல்வேறு இழப்புகளைத் தாண்டி சேர்த்து வைக்கிறார்கள் இந்த மூவரும். பிறகு, நண்பரும் காதலியும் பிரிந்துவிட, மூவரும் அந்த இளைஞரையும் அந்தக் காதலியையும் பழிவாங்கத் துடிக்கிறார்கள்.
படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்தே இது தேறாத படம் என்று தெரிந்துவிடுகிறது. அதற்கடுத்த காட்சியில் ஹீரோவின் அறிவுரை. தமிழ் சினிமாவில் அறிவுரை சொல்வதற்கான உரிமை ரஜினிகாந்திற்கும் அதற்குப் பிறகு விஜய்க்கும்தான் இருக்கிறது என்பது தெரியாமல் போகிற போக்கில் பலரும் பல அறிவுரைகளைக் கத்துகிறார்கள். அதில் பல காதலின் கீழ்மையையும் நட்பின் மேன்மையையும் உரத்த குரலில் அறிவிக்கின்றன. இதெல்லாம் 20 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் குமுறித் தீர்க்கப்பட்டவை. தாங்க முடியவில்லை. இந்தப் படத்தில் அறிமுகமாகியிருக்கும் இரண்டு பெண்கள்தான் ஒரே ஆறுதல்.
திரைக்கதையில் இருக்கும் ஓட்டைகளையெல்லாம் பட்டியலிடுவது சரியான கடி வேலை. சுப்ரமணியபுரம் புலி என்றால் நாடோடிகள் பூனை. சுப்ரமணியபுரம் போக்கிரி என்றால், நாடோடிகள் தோரணை. இதில் புரியாத மேட்டர் என்னவென்றால், இணையதளங்களில் எப்படி இப்படி கொண்டாடித் தள்ளுகிறார்கள் என்பதுதான். ஒரு எதிர்மறையான விமர்சனம்கூட கண்ணில் படவில்லை. இந்தப் படத்தை எதிர்த்து எழுதுவதே தமிழினத்திற்கு செய்யும் துரோகம் (இப்போது இந்த துரோகம்தான் பேமஸ்) என்பது மாதிரி ஆகிவிட்டது. எவ்வளவோ செய்துவிட்டோம், இந்தத் துரோகத்தையும் செய்துவிடுவோம் என்றுதான் இந்த விமர்சனம்.
ஆனால், டிரெய்லரைப் பார்த்துப் பரவசப்பட்டு, படத்துக்குப் போகும் என்னை மாதிரி ஆட்களையெல்லாம், வாயில் ஒரு செருப்பைக் கவ்வக் கொடுத்துவிட்டு, இன்னொரு செருப்பாலேயே அடிக்க வேண்டும்.

நாடோடிகள்தமிழில் கடந்த சில மாதங்களாக வெளிவரும் படங்களைப் பார்க்கும் சினிமா ரசிகனுக்கு விரக்திதான் மிச்சம். பசங்க படத்திற்குப் பிறகு சொல்லும்படியாக ஒரு படமும் வரவில்லை. இதற்கிடையில் டிவிகளில் நாடோடிகள் படத்தின் விளம்பரம் வெளிவந்தபோது, சட்டென எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை பிறந்தது. சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் கொண்டாடப்பட்ட படமான சுப்ரமணியபுரம் படத்தை இயக்கிய சசிகுமார் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருப்பதும், இந்தப் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி சுப்ரமணியபுரம் படத்தில் நடித்திருந்ததும்தான் இந்த எதிர்பார்ப்பிற்குக் காரணம். இந்த சமுத்திரக்கனி, இதற்கு முன்பு நிறைஞ்ச மனசு படத்தை இயக்கியவர் என்பதும் பிறகு டிவி சீரியல்களை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் கொஞ்ச நாள் மறந்துபோய், அந்த டிரெய்லர்களைப் பார்க்கும்போதெல்லாம் ஒருவித பரவசம் ஏற்பட்டது.

ஆனால், படத்தைப் பார்த்தவுடன் கடும் விரக்தி ஏற்படுகிறது. சசிகுமார் என்ற இயக்குனர் – நடிகரின் பெயரில் இருக்கும் பிராண்ட் வேல்யூவை வைத்துக்கொண்டு ஒரு அமெச்சூரான படத்தைக் கொடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி. மூன்று நண்பர்கள். மூவருக்கும் வெவ்வேறு இலக்குகள். அப்போது, சசிகுமாரைத் தேடி பழைய நண்பர் ஒருவர் வருகிறார். அவருடைய காதலில் பிரச்னை. அந்த இளைஞரையும் அவரது காதலியையும் பல்வேறு இழப்புகளைத் தாண்டி சேர்த்து வைக்கிறார்கள் இந்த மூவரும். பிறகு, நண்பரும் காதலியும் பிரிந்துவிட, மூவரும் அந்த இளைஞரையும் அந்தக் காதலியையும் பழிவாங்கத் துடிக்கிறார்கள்.

படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்தே இது தேறாத படம் என்று தெரிந்துவிடுகிறது. அதற்கடுத்த காட்சியில் ஹீரோவின் அறிவுரை. தமிழ் சினிமாவில் அறிவுரை சொல்வதற்கான உரிமை ரஜினிகாந்திற்கும் அதற்குப் பிறகு விஜய்க்கும்தான் இருக்கிறது என்பது தெரியாமல் போகிற போக்கில் பலரும் பல அறிவுரைகளைக் கத்துகிறார்கள். அதில் பல காதலின் கீழ்மையையும் நட்பின் மேன்மையையும் உரத்த குரலில் அறிவிக்கின்றன. இதெல்லாம் 20 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் குமுறித் தீர்க்கப்பட்டவை. தாங்க முடியவில்லை. இந்தப் படத்தில் அறிமுகமாகியிருக்கும் இரண்டு பெண்கள்தான் ஒரே ஆறுதல்.

திரைக்கதையில் இருக்கும் ஓட்டைகளையெல்லாம் பட்டியலிடுவது சரியான கடி வேலை. சுப்ரமணியபுரம் புலி என்றால் நாடோடிகள் பூனை. சுப்ரமணியபுரம் போக்கிரி என்றால், நாடோடிகள் தோரணை. சுப்ரமணியபுரம், பசங்க போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியிருக்கும் புதிய அலையையே, ஒரு வகைமாதிரியாக மாற்றியிருக்கிறது இந்த படம்.  அதாவது, ஒரு வெற்றிகரமான மசாலா படம் வந்ததும் அதைப் போலவே பத்து குப்பை மசாலா படங்கள் வருவது போல. இதில் புரியாத மேட்டர் என்னவென்றால், இணையதளங்களில் எப்படி இப்படி கொண்டாடித் தள்ளுகிறார்கள் என்பதுதான். ஒரு எதிர்மறையான விமர்சனம்கூட கண்ணில் படவில்லை. மாறாக, இதைவிட பல மடங்கு மேம்பட்ட பசங்க படம் இந்த அளவு உற்சாகத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தவில்லை. நாடோடிகள் படத்தை எதிர்த்து எழுதுவதே தமிழினத்திற்கு செய்யும் துரோகம் (இப்போது இந்த துரோகம்தான் பேமஸ்) என்பது மாதிரி ஆகிவிட்டது. எவ்வளவோ செய்துவிட்டோம், இந்தத் துரோகத்தையும் செய்துவிடுவோம் என்றுதான் இந்த விமர்சனம்.