என்னத்த கண்ணையா வெகு சில படங்களில் மட்டுமே நடித்துவந்தாலும் தமிழ்ச் சமூகத்தின் மீது தனது வசனங்களின் ஊடாக பெரும் தாக்கம் செலுத்திவருகிறார். நேற்று திருவல்லிக்கேணியில் ஒரு தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டம் துவங்குவதற்கு முன்பு பாடல்கள் சிலவற்றை ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு பாட்டு வெகுவாகக் கவனத்தைக் கவர்ந்தது. அந்தப் பாட்டின் பல்லவி இதுதான்: “வரும் ஆனா.. வராது..” அதாவது, ஜெயலலிதாவுக்கு கூட்டம் வரும் ஓட்டு வராது என்று போகிறது பாட்டு.
“கள்ளக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே…”, “கற்பூர கனல்வாக்கைக் கலைஞர் சொல்லட்டும்” போன்ற கம்பீரமான பாடல்களுடன் வலம்வந்த தி.மு.க. இன்று ஜெயலலிதாவுக்கு வரும் கூட்டத்தைப் பார்த்து, வரும் ஆனா வராது என்ற நிலைக்கு வந்துவிட்டது.
அதற்காக, வரும் ஆனா வராது என்ற சொற்றொடரை நான் குறைத்து மதிப்பிடுவதாக நினைக்கக்கூடாது. பல அர்த்த அடுக்குகளை உள்ளடக்கிய வாக்கியம் அல்லவா அது?
December 15, 2010
தமிழ்ச் சமூகமும் என்னத்த கண்ணையாவும்
Posted by கட்டியக்காரன் under சும்மா ஒரு கருத்துLeave a Comment
Advertisement