மீனாட்சி அம்மன் கோவிலுக்கு
வரும் சிறுவர்கள்
பெற்றோரிடம்
அடம்பிடித்து,
கோவில் கடைகளில் விற்கும்
கலைடாஸ்கோப்பை கண்ணில் பொருத்தி,
வர்ண ஜாலங்களைப் பார்த்து
மிரள்கிறார்கள்.
ஏதோ ஒரு சிறுவன்,
ஏதோ ஒரு கலைடாஸ்கோப்பை
கண்ணில் வைத்து, பார்வையைச்
செலுத்தும்போது
வண்ணச் சிதறல்களாய்
விரிகிறது எனது பால்யம்.