Category Archives: Uncategorized

“ஆங்கில அரசுக்கு விசுவாசியாக இருப்பேன்” – வி.டி. சாவர்கர்

தனது நடவடிக்கைகளுக்காக 50 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, 1911ல் அந்தமானில் உள்ள செல்லுலார் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார் வி.டி. சாவர்கர். தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டுமென உடனே அரசுக்கு மனு செய்தார். பிறகு 1913ல் பல முறை கடிதம் எழுதினார். முடிவாக 1921ல் இந்தியச் சிறைக்கு மாற்றப்பட்ட அவர், 1924ல் விடுதலை செய்யப்பட்டார். இனிமேல் இந்திய … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் விவகாரத்தில் தமிழ்நாட்டில் நடந்தது என்ன?

கேரளாவில் தலித்கள் 6 பேர் உள்பட பல ஜாதிகளைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டதையடுத்து, இந்தக் கோரிக்கையை முதன் முதலில் முன்னெடுத்த தமிழ்நாட்டில் இது ஏன் நடக்கவில்லை என்று தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. ஜாதி பேதங்களைக் கடந்து, தகுதியின் அடிப்படையில் அர்ச்சகர்களை நியமிப்பது என்ற விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து ஒரு சின்ன டைம்லைன். இதில் முக்கியப் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

“நீடாமங்கலத்தில் நிகழ்ந்ததென்ன சொல்லுவீர்”

1937ஆம் வருடம். அப்போதைய தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் கிராமம். தென்தஞ்சை ஜில்லா காங்கிரசின் 3வது மாநாடு இந்த ஊரில் 28.12.1937ல் நடைபெற்றது. மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவர் அந்தப் பகுதியில் பெரும் நிலக்கிழாராக விளங்கிய டி.கே.பி. சந்தன உடையார். அவருக்குச் சொந்தமான அல்லது அவரது தமையனாருக்குச் சொந்தமான ஒரு மாளிகையில் மாநாடும் அதை ஒட்டிய மைதானத்தில் சமபந்தி … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

கோவில் நுழைவுச் சட்டத்தை பெரியார் எதிர்த்தாரா?

கோவில் நுழைவுப் போராட்டத்தில் பெரியார் எதுவுமே செய்யவில்லை என்று சொல்வது அயோக்கியத்தனம் மட்டுமல்ல, மூடத்தனமும்கூட. ஒருவர் செய்த செயல்களைப் பற்றி எழுதும்போது, சம்பந்தப்பட்டவரின் பேச்சுகள், எழுத்துகளை மேற்கொள் காட்டுவதுதான் அறிவு நாணயம். காந்தியைப் பற்றி எழுதும்போது காந்தி குறித்து கோட்ஸே கூறியதை மேற்கோள்காட்டி, எதையாவது சொல்வதற்குப் பெயர் சங்கித்தனம். 1.காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதே வைக்கம் போராட்டத்தில் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

சமச்சீர் கல்வி தரம் குறைந்ததா?

‘நீட்’ தேர்வு குறித்த சர்ச்சை உச்சகட்டத்தில் இருந்தபோது, தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் சமச்சீர் கல்வி முறையின் காரணமாகத்தான் மாணவர்களின் தரம் வெகுவாகக் குறைந்துபோயிருக்கிறது. ஆகவேதான் மாநில அரசு ‘நீட்’ தேர்வை எதிர்க்கிறது என்ற வாதம் பரவலாக முன்வைக்கப்பட்டது. ஆனால், சமச்சீர் கல்வி (Uniform system of school education) என்ற நடைமுறை (பாடத்திட்டம் அல்ல) … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

கபாலியை விமர்சிப்பது யாருக்கு லாபம்?

மெட்ராஸ் படத்தை அடுத்து, ரஞ்சித் ரஜினியுடன் இணைந்தபோது தமிழ் திரையுலகில் மட்டுமல்ல அறிவுலகிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பருத்தி வீரன் படத்திற்குப் பிறகு மிகச் சுமாரான வர்த்தகத் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த கார்த்தியை வைத்து, வடசென்னையை மையமாகக் கொண்டு, தலித் அடையாளங்களை, போராட்டங்களை முன்வைத்து மெட்ராஸ் படத்தை உருவாக்கியிருந்தார் ரஞ்சித். இந்தப் பின்னணியில் கபாலி படத்தின் மீது … Continue reading

Posted in சினிமா விமர்சனம், Uncategorized | Tagged , , , | Leave a comment

அதே பெண்ணா நான்?

தமிழின் சங்க காலக் கவிதைகளைப் போல, பிராகிருதியில் தொகுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பு ‘காதா ஸப்தஸதி’. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டவை. ஆகவே, அதற்கும் முன்பாகவே இவை எழுதப்பட்டிருக்க வேண்டும். ஹல என்ற சாதவாகன மன்னனின் காலத்தில் இவை தொகுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா. இந்தக் கவிதைகள் பெரும்பாலும் பெண்களின் … Continue reading

Posted in Uncategorized | 1 Comment

ஸ்காண்டிநேவியக் கொலைகள்

ஸ்வீடனின் கடற்கரையோர சிறுநகரில் ஓர் அதிகாலையில் சிறு விமானம் ஒன்று விழுந்து நொறுங்குகிறது. அதற்குச் சில நாட்களுக்குப் பிறகு, தையல் பொருட்களை விற்கும் இரண்டு வயதான பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்டு, கடையோடு எரிக்கப்படுகிறார்கள். அதற்குப் பிறகு, போதை மருந்து வர்த்தகத்தில் தொடர்புடைய ஒருவர் சுட்டுக்கொல்லப்படுகிறார். இவையெல்லாம் ஒரே காவல் நிலைய வரம்புக்குள் நடக்கிறது. கர்ட் வாலண்டர் ஒரு … Continue reading

Posted in Uncategorized | 4 Comments

சட்டையில் ஒரு ரத்தக் கறை

ஒரு கொலையில் சம்பந்தப்படுவதாக குற்றம்சாட்டப்படுபவர்கள், அதிலிருந்து விடுவிக்கப்பட அலிபியை நிரூபிப்பதுரொம்பவுமே கடினமான காரியம். நான் 9ஆம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள். பிடி வாத்தியாரான வேல் முருகன், எங்கள் வகுப்பில் இருந்த எல்லோரையும் மைதானத்தில் உட்காரவைத்து பேச ஆரம்பித்தார். “பசங்களா, போன வாரம் செவ்வாய்க் கிழமை காலையில் 3வது பாடவேளை பி.டி தானே. அந்த வகுப்பு … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

கலாச்சார வன்முறை

போன வாரம் மங்களூரில் ஒரு பப்பில் ஆடிக்கொண்டிருந்த இளைஞர்களை ஸ்ரீ ராம சேனா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ரவுடிக் கும்பல் ஒன்று கொடூரமாகத் தாக்கியது. கலாச்சாரத்திற்கு எதிரான செயல் என்று காரணமும் சொன்னார்கள். சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய மாநில பா.ஜ.க. அரசுக்கு பல நாட்கள் பிடித்தன. “பப் கலாச்சாரத்தை ஏற்க முடியாது” என்று அறிவித்தார் … Continue reading

Posted in Uncategorized | 2 Comments