ஆழ்வார் படப்பிடிப்பில் இருந்த அஜித்தை சந்தித்த போது, தன் முந்தைய படங்களின் தோல்விக்கெல்லாம் தன் காரணமல்ல என்று சொன்னார். பல்வேறு நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.
கே: உங்களுடைய சமீபத்திய படங்கள் ஏதும் ஓடவில்லையே?
ப: நான் நடித்திருக்கிறேன் என்பதாலேயே அவை ஓடவில்லை. ரசிகர்கள் திரையரங்குகளின் பக்கம் வருவதையே தவிர்த்தனர். இதற்கு நான் பொறுப்பாக முடியாது.
கே: உங்களுக்கு போட்டியாக நடிக்க வந்த விஜய் எங்கேயோ போய்விட்டார். நீங்கள் இன்னும் செட்டிலாகவில்லை.
ப: என்னை அழ வைப்பதுதான் உங்கள் நோக்கமா?
கே: சூர்யா-ஜோதிகா திருமணத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப: எல்லோரும் அவர்களைப் பற்றியே பேசுவதை கேட்டால் எரிச்சலாக இருக்கிறது. எனக்கும் ஷாலினிக்கும் திருமணம் நடந்த போது அப்படி பேசினீர்களா?
கே: வடிவேலு ஹீரோவாக நடித்த இம்சை அரசன் படம்கூட நன்றாக ஓடுகிறது.
ப: சிம்பு தேவனுக்கும் எனக்கும் ஏற்கனவே பிரச்னை உண்டு. இதனால் வேண்டுமென்றே அவர் வடிவேலுவை வைத்து நல்ல படங்களை எடுக்கிறார். இதை நான் சும்மா விட போவதில்லை. இனி எனக்கும் வடிவேலுவுக்கும்தான் போட்டி.
கே: இப்போது ஆழ்வார் என்ற படத்தில் நடிக்கிறீர்கள். கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில் ஆழ்வார்கடியான் என்று ஒரு பாத்திரம் இருப்பது தெரியுமா?
ப: இந்த ஆழ்வார் யாருக்கும் அடியான் அல்ல.
கே: பரமசிவன் படத்தில் பாதி வரை நீள தலைமுடியுடன் வந்தீர்களே, எதற்காக?
ப: வழக்கம் போல கதைக்கும் அதற்க்கும் சம்பந்தமில்லை. ஷுட்டிங் ஆரம்பிக்கும் தினத்திற்கு முன்பு முடி வெட்டிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். ஷூட்டிங்கிற்கு முந்தைய தினம் எல்லா முடிவெட்டும் கடைகளையும் மூடும்படி செய்துவிட்டார்கள் எனது போட்டியாளர்கள். பிறகு ஒரு மாதம் அந்த ஏரியாவில் முடிவெட்டும் கடைகளே திறக்கவில்லை.
கே: போட்டியாளர்கள் என்று யாரைச் சொல்கிறீர்கள்?
ப: வடிவேலுவுடன் நடிக்கும் போண்டா மணியையும் முத்துக் காளையயும்தான் சொல்கிறேன். அவர்களை ஜெயிக்காமல் விடமாட்டேன்.
September 17, 2006 at 2:47 pm
இந்த செய்தி உண்மை என்றால், இதன் மூலத்திற்கும் ஒரு தொடர்பு கொடுத்திருக்கலாமே?!
September 17, 2006 at 4:12 pm
சூப்பர் கிண்டல் பேட்டி! ஷாலினி அஜீத்தைக் கல்யாணம் கட்டிக்கொண்டு விட்ட ஆற்றாமையில்தானே இப்படியெல்லாம் சிட்டிஜனை ஓட்டுகிறீர்கள்?
September 17, 2006 at 4:18 pm
[...] என்னை அழ வைப்பதுதான் உங்கள் நோக்கமா? – தமிழ் வலைப்பதிவுக்குத் தந்த பேட்டியில் அஜித் எமோசனல்! [...]
September 19, 2006 at 1:08 pm
you stupid,
oonaku vera vealai vetti illana gammunu keda. atha vututu yenga thalaya pathi kindal addichinu irundenu vayee mavaney nadakarathey vera.
September 19, 2006 at 5:46 pm
கட்டியக்கார்ரே, நாந்தான் அப்பமேச் சொன்னன்ல.
September 20, 2006 at 11:26 am
நிஜமானதோ இல்லையோ ஆனால் வாசிக்கலாம்.
http://thakaval.wordpress.com
September 20, 2006 at 3:12 pm
engal thala ajithai kidaladikkum neer oliga…summa nalla karpanai ..aanal innum ajith pesum ..adikadi use pannum varthaigalodu eludhi irundhal vilundhu vilundhu sirithirppom..bettr luck next time
September 20, 2006 at 6:48 pm
6. Link spam alert!
September 23, 2006 at 9:32 am
what do you think? if you want you can make fun of anybody or what…? by the way are you a vijay fan?
Ajith has comeback man…….
September 23, 2006 at 6:23 pm
//what do you think? if you want you can make fun of anybody or what…?//
Ajith is a sacred cow? One doesn’t need to be a Vijay fan to laugh at Ajith. Vijay is another joke. But nothing can beat Ajith.
July 12, 2007 at 4:36 pm
joo man you are vijay naay fan….
thala ajith actor pannina padam
paramasivan hit
thiruppathi super hit
god father mega hit
you shadap man you vijay fans vijay mathura flop,sachin fliop,aathi flop,,pakavathi flop,pkri little pet win or sometrhing…atm will be flop…
July 12, 2007 at 5:38 pm
அஜீத் ரசிகரா நீங்கள் இவ்வளவு மெதுவாகவா பதிலளிப்பது? அஜீத் பத்தாண்டுகளுக்குப் பிறகு எப்படி இருப்பார் என்று ஒரு புகைப்படப் பதிவு போட்டிருக்கிறேனே அதைப் பார்த்தீர்களா? Enjoy the day!