ஆழ்வார் படப்பிடிப்பில் இருந்த அஜித்தை சந்தித்த போது, தன் முந்தைய படங்களின் தோல்விக்கெல்லாம் தன் காரணமல்ல என்று சொன்னார். பல்வேறு நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.

கே: உங்களுடைய சமீபத்திய படங்கள் ஏதும் ஓடவில்லையே?

ப: நான் நடித்திருக்கிறேன் என்பதாலேயே அவை ஓடவில்லை. ரசிகர்கள் திரையரங்குகளின் பக்கம் வருவதையே தவிர்த்தனர். இதற்கு நான் பொறுப்பாக முடியாது.

கே: உங்களுக்கு போட்டியாக நடிக்க வந்த விஜய் எங்கேயோ போய்விட்டார். நீங்கள் இன்னும் செட்டிலாகவில்லை.

ப: என்னை அழ வைப்பதுதான் உங்கள் நோக்கமா?

கே: சூர்யா-ஜோதிகா திருமணத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ப: எல்லோரும் அவர்களைப் பற்றியே பேசுவதை கேட்டால் எரிச்சலாக இருக்கிறது. எனக்கும் ஷாலினிக்கும் திருமணம் நடந்த போது அப்படி பேசினீர்களா?

கே: வடிவேலு ஹீரோவாக நடித்த இம்சை அரசன் படம்கூட நன்றாக ஓடுகிறது.

ப: சிம்பு தேவனுக்கும் எனக்கும் ஏற்கனவே பிரச்னை உண்டு. இதனால் வேண்டுமென்றே அவர் வடிவேலுவை வைத்து நல்ல படங்களை எடுக்கிறார். இதை நான் சும்மா விட போவதில்லை. இனி எனக்கும் வடிவேலுவுக்கும்தான் போட்டி.

கே: இப்போது ஆழ்வார் என்ற படத்தில் நடிக்கிறீர்கள். கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில் ஆழ்வார்கடியான் என்று ஒரு பாத்திரம் இருப்பது தெரியுமா?

ப: இந்த ஆழ்வார் யாருக்கும் அடியான் அல்ல.

கே: பரமசிவன் படத்தில் பாதி வரை நீள தலைமுடியுடன் வந்தீர்களே, எதற்காக?

ப: வழக்கம் போல கதைக்கும் அதற்க்கும் சம்பந்தமில்லை. ஷுட்டிங் ஆரம்பிக்கும் தினத்திற்கு முன்பு முடி வெட்டிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். ஷூட்டிங்கிற்கு முந்தைய தினம் எல்லா முடிவெட்டும் கடைகளையும் மூடும்படி செய்துவிட்டார்கள் எனது போட்டியாளர்கள். பிறகு ஒரு மாதம் அந்த ஏரியாவில் முடிவெட்டும் கடைகளே திறக்கவில்லை.

கே: போட்டியாளர்கள் என்று யாரைச் சொல்கிறீர்கள்?

ப: வடிவேலுவுடன் நடிக்கும் போண்டா மணியையும் முத்துக் காளையயும்தான் சொல்கிறேன். அவர்களை ஜெயிக்காமல் விடமாட்டேன்.