Monthly Archives: September 2008

நொண்டி கடை

தற்போது வடக்கு மாசி வீதியில் வசிக்கும் பலருக்கு இப்படி ஒரு கடை இருந்ததே தெரியாது. ஆனால் 80களின் துவக்கத்தில் அப்படி ஒரு கடை இருந்தது. தற்போது கோபால் டாக்டர் அலுவலகத்திற்கு எதிரே அந்த இடம் இருக்கிறது. அந்தக் கடையின் உரிமையாளர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர். அதனால், அந்தக் கடையை நொண்டி கடை என்றுதான் எல்லோரும் அழைத்து … Continue reading

Posted in நம்ம பயலுக | 4 Comments

அண்ணாவின் மாயா பஜார்

வடக்கு மாசி வீதியின் அடையாளங்களில் ஒன்று அண்ணா கடை. அறிஞர் அண்ணாவுக்கும் இந்தக் கடைக்கும் சம்பந்தமில்லை. கடையை வைத்திருப்பவரை எல்லோரும் அண்ணா என்று அழைப்பதால் கடைக்கு இந்தப் பெயர். நான் அவரை அண்ணா என்று கூப்பிடுவேன். என் தந்தையும் அவரை அண்ணா என்று அழைத்து, அவருடைய மாணவப் பருவத்தில் பொருள்களை வாங்கியிருக்கிறார். அதாவது, உலகம் தோன்றிய … Continue reading

Posted in நம்ம பயலுக | 2 Comments

சாணக்கியன் சொல்

ரோட்டுக் கடையில் இட்லி சாப்பிடும்போது சட்னி அதிகம் வாங்கிச் சாப்பிடு என்பான் புத்திசாலி!

Posted in சும்மா ஒரு கருத்து | 4 Comments

இயற்கை மீது ஒரு வாரமலர் கவிதை

மேகத்திற்குத்தான் எவ்வளவு பரிகாசம் தன்னை எட்டிப்பிடிக்க நினைக்கும் மரத்தின் கைகளைத் தட்டிவிட்டுப் போகிறதே! ஓ அதனால்தான் வருந்தி பின் மழையாக அழுகிறதோ? (மேலே உள்ள கவிதை பரிசு ரூ. 25ஐப் பெறுகிறது)

Posted in படைப்பு | 3 Comments

தமிழ் இயக்குனர்களின் தெனாவட்டு

நான் அப்போதுதான் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தேன். என்னுடன் வேலை பார்த்த பெண் ஒருத்தி தன்னுடைய செல்போன் எண்ணைக் கொடுத்தாள். அடிக்கடி போன் செய் என்றாள். முதல் வாரம். வெள்ளிக் கிழமை அலுவலகத்தைவிட்டுக் கிளம்பினேன். கிளம்பிய பிறகுதான் நாளைக்கு அலுவலகம் இருக்கிறதா என்று திடீரென எனக்கு ஒரு சந்தேகம். அலுவலகத்திற்கே போன் செய்து கேட்டால் நன்றாக இருக்காது … Continue reading

Posted in அனுபவம் | 6 Comments