Category Archives: சும்மா ஒரு கருத்து

தமிழ்ச் சமூகமும் என்னத்த கண்ணையாவும்

என்னத்த கண்ணையா வெகு சில படங்களில் மட்டுமே நடித்துவந்தாலும் தமிழ்ச் சமூகத்தின் மீது தனது வசனங்களின் ஊடாக பெரும் தாக்கம் செலுத்திவருகிறார். நேற்று திருவல்லிக்கேணியில் ஒரு தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டம் துவங்குவதற்கு முன்பு பாடல்கள் சிலவற்றை ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு பாட்டு வெகுவாகக் கவனத்தைக் கவர்ந்தது. அந்தப் பாட்டின் பல்லவி இதுதான்: “வரும் … Continue reading

Posted in சும்மா ஒரு கருத்து | Leave a comment

மீண்டும் கருத்துச் சுதந்திரம்

இயக்குனர் சீமான் சமீபத்திய ஜூனியர் விகடன் இதழில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில், தமிழகத்தில் கருத்துச் சுதந்திரமே இல்லை என்று குமுறுயிருந்தார். அதாவது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினால் பிரச்னையாக்குகிறார்களாம். தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசினால், எந்த நாட்டிலும் பிரச்னை வரத்தான் செய்யும். எல்டிடிஇ மீதான தடை இன்னும் நீடிப்பது சரியா என்பது வேறு பிரச்னை. … Continue reading

Posted in சும்மா ஒரு கருத்து | 7 Comments

இந்தி பேசுபவர்களுக்கு சுரணை இருக்கிறதா?

மகாரஷ்டிரத்தில் ரயில்வே தேர்வு எழுதவந்த வட இந்திய மாணவர்கள் மீது மகாராஷ்டிர நவ நிர்மாண சேனையினர் தாக்குதல் நடத்தியது, வட இந்தியவர்களை அதிர வைத்திருக்கிறதோ என்னவோ, வட இந்திய ஊடகங்களை அதிர வைத்திருக்கிறது. குமுறித் தள்ளுகிறார்கள். “அவர் ஆஃப் ஷேம்” என்கிறது அவுட்லுக். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக புலம்பித் தள்ளுகிறார்கள். சகிப்புத் தன்மையைப் பற்றிப் பக்கம் பக்கமாக … Continue reading

Posted in சும்மா ஒரு கருத்து | 2 Comments

சாணக்கியன் சொல்

ரோட்டுக் கடையில் இட்லி சாப்பிடும்போது சட்னி அதிகம் வாங்கிச் சாப்பிடு என்பான் புத்திசாலி!

Posted in சும்மா ஒரு கருத்து | 4 Comments

குறைந்த செலவில் தரமான படங்கள்!

2005, 2006ஆம் ஆண்டுகளில் குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கியிருக்கிறது. அதில் சில சிறந்த படங்களின் பெயர்கள் இதோ: மந்திரன், அறிவுமணி, ஸாரி எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு, பெண் நிலா, ப்ளஸ் கூட்டணி, சூப்பர்டா, றெக்கை, வரப்போகும் சூரியனே, அலையடிக்குது, உள்ளக் கடத்தல், ரைட்டா தப்பா, மறந்தேன் மெய் … Continue reading

Posted in சும்மா ஒரு கருத்து | 2 Comments

தவிர்க்க முடியாத ஆளுமை

கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னையில் நடந்த ஆழி பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன என்பது பற்றி எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்துவிட்ட நிலையில் , திரும்பவும் அதை விவரிப்பது தேவையில்லாதது. அதனால், அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டவை பற்றி மட்டும் சில கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். குஷ்பு – திருமாவளன் இடையிலான மோதலால் … Continue reading

Posted in சும்மா ஒரு கருத்து | 8 Comments

ஆவி அமுதாவும் பி.டி. சாமியும்

இந்த வார துக்ளக் இதழில் சீனியர் சிட்டிசன் என்பவர் எழுதும் துணுக்குத் தொகுப்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கு ஐ.மு.கூ சார்பில் போட்டியிடும் பிரதீபா படேலைப் பற்றி ஒரு துணுக்கு வந்திருக்கிறது. அவர் ஆவியுடன் பேசுவதாக சொல்லியதையடுத்து ஆவி அமுதா என்று பெயர் சூட்டியிருக்கிறார் சீனியர் சிட்டிசன். இந்த சீனியர் சிட்டிசன் ஒரு எழுத்தாளர். பல்வேறு புனைப்பெயர்களில் … Continue reading

Posted in சும்மா ஒரு கருத்து | 8 Comments

உடல், வெளி, மெய்ஞ்ஞானம், வாழ்வியல்..etc..

 பெண்ணியம் என்பதை பொத்தாம்பொதுவாக விளக்குவதானால், சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில் ஆணாதிக்கத் தனத்திலிருந்து பெண்களை விடுவிப்பது என்று சொல்லலாம். பல ஆண்டுகளாக இது குறித்த கருத்துகள், சிந்தனைகள் வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றன. மேரி டாலி, சார்லோட் பஞ்ச், மெரிலின் ஃப்ரை போன்ற பெண்ணியவாதிகள் பெண் விடுதலையை முன்வைத்து தொடர்ந்து போராடியும் எழுதியும் வந்தனர். நம்மிடத்தில் இப்படிச் சிந்தனையாளர்கள் … Continue reading

Posted in சும்மா ஒரு கருத்து | 4 Comments

அதிரடி ரெய்டு

பிப்ரவரி 12ந் தேதி மாலை நாளிதழ்களில் பின்வருமாறு தலைப்பிட்டு ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது: கிழக்குக் கடற்கரைச் சாலை பண்ணை வீடுகளில் போலீஸ் அதிரடி ரெய்டு: 6 பேர் கைது. இந்த ஆறு பேரும் என்ன செய்தார்களாம்? ஒரு பண்ணை வீட்டில், வீட்டு உரிமையாளரின் அனுமதி பெற்று, உள்ளே உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்ததுதான் அவர்கள் செய்த தவறாம். … Continue reading

Posted in சும்மா ஒரு கருத்து | 5 Comments

கறுப்பே அழகு, காந்தலே ருசி!

இரு வாரங்களுக்கு முன்பு விஜய் டிவியின் நீயா, நானா நிகழ்ச்சியில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பு இதுதான்:  சிவப்பாக இருப்பவர்கள் சமூகத்தில் அதிக மதிப்புப் பெறுகிறார்களா? தன்னுணர்ச்சி மிக்க யாருக்கும் அன்றைய விவாதம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். சிவப்பாக இருப்பவர்களுக்கு அதிக மதிப்பு இருக்கிறது என்று பேசியவர்களில் பெரும்பாலானவர்கள் சிவந்த நிறமுடையவர்கள். சிவந்த நிறமுடையவர்களுக்கு அதிக … Continue reading

Posted in சும்மா ஒரு கருத்து | 14 Comments